வெள்ளி, 12 மே, 2017

இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம்  !!!



கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
 இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
 தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
 சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
 மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

கர்ப்பமுற்ற பெண்கள் வாயில் ஓமத்தை அடக்கி கொண்டால் வயிற்று புரட்டல், வாந்தி வராது.

மாதுளம் பழம், திராட்சை பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம் இவற்றை சளி தொந்தரவு உள்ளவர்கள் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாது.

 குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.

மெலிந்த தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வேளை கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டுவர உடல் தேறும்.

எலுமிச்சம் பழச்சாறில் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு மூன்றையும் அரைத்துப் பூச நகச் சுற்று குணமாகும்.

அதிமதிரம், லவங்கம்பட்டை இரண்டையும் தூளாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.

குழந்தைப் பெற்ற பெண்கள் வெந்தயத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து களி செய்து சாப்பிட, தாய்ப்பால் அதிகம் ஊறும்.
செவ்வாழைப் பழத்துடம் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகினால், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

செவ்வாய், 9 மே, 2017

இஞ்சியில் இவ்வளவு மருத்துவ குணங்களா அறிந்தால் ஆச்சார்யா படுவீர்கள்!




பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு

மருத்துவக் குணங்கள்:
மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.


இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சி,நல்லமிளகு, சீரகம்... இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து உட்கொண்டால் பித்தம், வாதம், பசியின்மை, அஜீரணக் கோளாறுகள், வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, குளிர் காய்ச்சல், காய்ச்சல் ஆகியவை நீங்கும்.

வாரத்திற்கு ஒரு நாள் இஞ்சிச்சாறு அருந்தினால் உடல் அசதி நீங்கும்.


இஞ்சியைத் தோல் நீக்கி வில்லையாக நறுக்கி பின்னர் நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி நுரை வற்றியதுடன் இறக்கி ஆற வைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடலுக்கு வலிமை தரும்.

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

இஞ்சியைத் தட்டி தண்*ரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

Disclaimer- Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors' advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred using/trying the articles, videos, tips from this site.


படுத்தவுடன் தூக்கம் வர…….

லருக்கும் படுத்தவுடன் தூக்கம் என்பது பெரும் கனவாகிப்போனது என்று தான் சொல்ல வேண்டும். வேலைப்பளு, மன உளைச்சல் என பல காரணங்களால் தூக்கம் தொலைத்தவர்கள் ஏராளம்.

சிலருக்கோ கனவில் ஏதாவது தொல்லை நேர்வது, ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் என பல உண்டு. ஆனால் படுத்தவுடன் அடுத்த நாள் காலை வரை எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வேண்டுமானால் அதற்கும் சில வழிகள் உண்டு. அவற்றை முறையாகப் பின்பற்றினாலே போதும். உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

அதிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அந்த நேரத்திலும் குறட்டை போன்ற எந்த பிரச்னையும் உண்டாகாமல் தூங்க வேண்டுமானால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

‘நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும் சுரக்கும்.

பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணி நேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தை களுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வி&யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.


தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:


காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.
தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் குளியுங்கள். அதிலும் குறிப்பாக, நல்ல நறுமணம் வீசக்கூடிய ஏதேனும் வாசனை திரவியத்தை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்தலாம். அந்த குளியல் ஆனந்தத்தையும் புத்துணர்வையும் தருவதோடு நல்ல நிம்மதியான தூக்கத்தையும் தரும்.

சுத்தமான, உங்கள் வசதிக்கு ஏற்றபடியான நல்ல மெத்தை விரிப்புகள், தலையணைகள் அவசியம். அதேபோல் வீட்டில் தானே இருக்கிறோம் என்று நினைக்காமல் நல்ல சுத்தமான. ஆடைகளை அணிந்து கொள்வது அவசியம்.

படுக்கையில் விரிப்பதற்காகப் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள் மென்மையான லைட் கலரில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

குளிப்பாக பிளாக்,பிரௌன் கலர் விரிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள். அந்த நிறங்கள் அதிக மனஅழுத்தத்தை உண்டாக்கும்.

உங்கள் அருகில் யாரும் படுத்துத் தூங்கவில்லை, நீங்கள் தனியாகத் தூங்குகிறீர்கள் என்றால் உங்களுடன் மிக மென்மையான பொம்மைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம். அது உங்கள் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும்.

சில சமயங்களில் நம்முடைய தலையணைகளே நம் தூக்கத்தைக் கெடுக்கும். ஆதலால் தலையணை பட்டுபோல், இறகைப் போல மென்மையானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு மிகப் பிடித்த ரூம் ஸ்பிரே பயன்படுத்துங்கள். நீங்களும் உங்களுக்குப் பிடித்த மென்மையான செண்ட் அடித்துக் கொள்ளுங்கள்.

தனியாகத் தூங்குபவரென்றால் மிக மென்மையாக இருக்கும்படியான மெல்லிசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’

Comments System

Disqus Shortname